1) விடைகளை அல்குர்ஆனின்  ஸுரா 1 வசனம் 1 முதல் ஸுரா 2 வசனம் 141 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

3) விடை கண்டுபிடித்த  ஸுரா எண்(கள்) , வசன எண்(கள்) ஐ குறிப்பிடவும்.


1) இறைவா! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! ------- மற்றும்----- ன் வழியில் அல்ல.

        a) முனாஃபிக் , காஃபிர்

        b) அல்லாவின் கோபத்திற்கு ஆளானோர் , வழி தவறியோர்

        c) குடிகாரன் , வட்டி தொழில் செய்பவன்

        d) ஷைத்தான் , இப்லீஸ்                               

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):



  2) முனாஃபிக்குகளின் வியாபாரம் இலாபமளிக்கவில்லை.இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும் இல்லை. இவர்களுக்கு உதாரணம்

a)   நெருப்பு மூட்டிய ஒருவன் அல்லாஹ் அவர்கள் ஒளியை அணைத்துவிட்டான்

b)  காரிருள்,இடி,மின்னல் கலந்த மழை

c)   a மற்றும் b

d)  கல்லில் பெய்யும் மழை

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  3) இது வேதமாகும்.இதில் எந்த சந்தேகமுமில்லை. இது ------------க்கு வழிகாட்டி

        a)  உலக மக்களுக்கு                  

        b)  நபிமார்களுக்கு

        c)  பயபக்தி உடையோருக்கு (முத்தகீன்)

        d)  முஹம்மது நபி உம்மத்திற்கு

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  4) “நீ தூய்மையானவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தோன். தீர்க்கமான அறிவுடையோன்“ இது யாருடைய கூற்று

        a)  ஆதம் மற்றும் ஹவ்வா    

        b)  மூஸா மற்றும் ஹாரூன்

        c)  நூஹ் நபி                  

        d)  மலக்குகள்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  5) மூஸா நபிக்கு வாக்களித்திருந்த இரவுகள்

        a) 30   

        b) 100  

        c) 40   

        d) 28

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  6) இறைநிராகரிப்பாளர்களின்--------- மற்றும் ------- ல் முத்திரையிடப்பட்டு விட்டது. ,,,,------ல் திரை உள்ளது

        a) இதயம், செவிப்புலன் ,,,,, பார்வை   

        b) செவிப்புலன், பார்வை ,,,, இதயம்

        c) இதயம் , பார்வை ,,,,,, செவிப்புலன்  

        d) இதயம் , சிந்தனை ,,,,, ஐம்புலன்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):

  7) அல்லாஹ்-------- அல்லது அதைவிட அற்பத்தில் மேலானதை உதாரணம் கூற வெட்கப்பட மாட்டான்.

        a) ஈ   

        b) கொசு       

        c) எறும்பு

        d) யானை

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  8) மூஸா நபியின் கூட்டத்தினர் குறிப்பிட்ட ஊருக்குள் நுழையும் போது கூறவேண்டி கட்டளையிடப்பட்ட வார்த்தை

        a) அஸ்ஸலாம்        

        b) அல்லாஹூ அக்பர்

        c) பதஹ்       

        d) ஹித்ததுன்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  9) குரங்குகளாக மாற்றப்பட்டவர்கள்

        a) வெள்ளிக்கிழமை தொழாதவர்கள்

        b) சனிக்கிழமை வரம்புமீறியவர்கள்

        c) ஸாலிஹ் நபியின் உம்மத்

        d) ஹூத் நபி உம்மத்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  10) மூஸா நபியின் கூட்டத்தினர் அறுக்குமாறு கட்டளையிடப்பட்ட மாட்டின் நிறம்

        a)  கறுப்பு கலந்த வெண்மை   

        b)  தூய வெண்மை

        c)  கெட்டியான மஞ்சள்        

        d)  தூய கறுப்பு

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  11) ஹாரூத் , மாரூத் இருந்த நகரம்

        a)  பலஸ்தீன்          

        b)  மதீனா முனவ்வரா

        c)  பாபிலோன்         

        d)  அபிசீனியா

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  12) அல்லாஹ்வின் நேர்வழிதான் உண்மையான நேர்வழி எனக்கூறக் கட்டளையிடப்பட்டவர்

        a)   ஈஸா நபி         

        b) முஹம்மது நபி

        c) மூஸா நபி          

        d) இப்ராஹிம் நபி

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  13) ”ரப்பனா தகப்பல் மின்னா! (இறைவா எங்களின் பணியை ஏற்றுக்கொள்வாயாக!)” இது யாருடைய கூற்று

        a)  இப்ராஹிம் நபி    

        b)   இஸ்மாயில் நபி

        c)  மூஸா நபி         

        d)  a மற்றும் b

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  14) ”அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” இது யாருடைய கூற்று

        a)   இப்ராஹிம் நபி   

        b)   இஸ்மாயில் நபி

        c)    மூஸா நபி

        d)   a மற்றும் b

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


  15) மூஸா நபி கல்லை அடித்தவுடன் வந்த நீரூற்றுகளின் எண்ணிக்கை

        a)  10  

        b)  9

        c)  12  

        d)  15

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


 16) மன்னு,ஸல்வாவிற்கு பதிலாக மக்கள் கேட்டது

        a) அரிசி,பருப்பு,கோதுமை

        b) கீரை,வெள்ளரிக்காய்,கோதுமை,பருப்பு,வெங்காயம்

        c) கோதுமை, கீரை, பருப்பு

        d) அரிசி, கீரை, வெள்ளரிக்காய்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


 17) அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் இதனை இறக்கி வைத்தார். அவர் எனக் குறிப்பிடப்படுபவர்

        a) முஹம்மது நபி     

        b) ஜிப்ரீல்

        c) ஈஸா நபி           

        d) மீக்காயீல்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


 18) ------ மற்றும்------கொண்டு இறைவனிடம் உதவி தேட வேண்டும்

        a) தவ்பா, பொறுமை   

        b) நோன்பு, தொழுகை

        c) பொறுமை, தொழுகை       

        d) துஆ, தவ்பா

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


 19) நரகத்தின் எரிபொருள்

        a)  உலக செல்வங்கள்

        b) உலக புகழை எதிர்பார்த்த ஆலிம்,ஷஹீது,செல்வந்தர்

        c) மனிதர்கள், கல்     

        d) பெட்ரோல்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):


 20) இஸ்ராயீலின் மக்களிடம் வாங்கிய வாக்குறுதிகளில் சில

         a) அல்லாஹ்வை தவிர எதனையும் வணங்கக்கூடாது

        b) பெற்றோர்,உறவினர்,அநாதை,ஏழைகளுக்கு உபகாரம் செயதல்

        c) மனிதர்களுக்கு அழகானதை சொல்லுதல்

        d) அனைத்தும்

விடை           ஸுரா எண்(கள்):       வசன எண்(கள்):

0 comments:

Post a Comment

 
Top