1) மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

2) விடைகளைக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தேடவும்
-------------------------------------------------------------------------------------------
 (ஸுரா 29 வசனம்45 முதல் ஸுரா 34 வசனம் 54 வரை)

1) தொழுகை, நம்மை -----மற்றும் --- லிருந்து தடுக்கும்
a) மானக்கேடானது ,,,,,,, மறுக்கப்பட்டது
b) குஃப்ர்,,,,,, ஷிர்க்
c) வீணாணது,,,,,, மறதி
d) மானக்கேடானது,,,,,,, ஷிர்க்
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)


2)  -------- வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது.
a) மக்கா                                                 b) உஹத்
c) தாகூத்        d) ரோமாபுரி
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)


3) அல்லாஹ்வின் தூதரிடம் நமக்கு ----- உள்ளது.
a) அருள்
b) உஸ்வத்துல் ஹஸனா (அழகிய முன்மாதிரி)
c) கைர் ( நன்மை)
d) ஆயாத் ( அத்தாட்சி)
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

4) மதீனா (மதீனத்துன் நபி) வின் பழைய பெயர்
a) மதீனத்து அவ்ஸ்                 b) அன்ஸாரிய்யா
c) யத்ரிப்                        d) குபா
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

5)“அல்லாஹ்விற்கு இணைவைத்தல் பெரும் பாவம்என லுக்மான் -----இடம் கூறினார்.
a) மைந்தன்             b) தந்தை
c) சகோதரன்            d) தாயார்
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

6) கரையிலும், கடலிலும் வெளிப்படும் குழப்பம் , அழிவுகளின் காரணம்
a) தொழுகையை பேணாதது
b) மனிதர்களின் கைகள் சம்பாதித்தவை
c) பூமி வெப்பமயமாதல்
d) அனைத்தும்
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

7) அல்லாஹ் மட்டுமே அறிந்தவை
a) மறுமை நாள் , மழை பற்றிய அறிவு
b) கர்பத்தில் உள்ளவை , மரண இடம் , மழை பற்றிய அறிவு
c) மறுமை நாள் , நாளைய சம்பாதிப்பு பற்றிய அறிவு
d) அனைத்தும்
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)


8) அல்லாஹ் அவனுக்கும் --------க்கும் நன்றி செலுத்துமாறு  கூறுகிறான்.
a) தூதர்                 b) பெற்றோர்
c) எஜமானன்            d) அருட்கொடை
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

9)“சப்தங்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் சத்தம்எனக் கூறியது.
a) ஈஸா நபி                                       b) முஹம்மது நபி
c) லுக்மான் நபி          d) இப்ராஹிம் நபி
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

10) இரும்பு  ------ க்காக மிருதுவாக்கப்பட்டது.
a) நூஹ் நபி             b) முஹம்மது நபி
c) ஸுலைமான் நபி      d) தாவூது நபி
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

11)“ரப்பனா! எங்கள் பயணங்களை நெடுந்தூரமாக்கி வைப்பாயாக!” எனக் கேட்டது
a) நூஹ் நபியின் கப்பல்வாசிகள்
b) அஸ்ஹாபுல் கரியத் ( ஊர்வாசிகள்)
c) ஸபவுவாசிகள்
d) மத்யன்வாசிகள்
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)


12) வானம்,பூமி மற்றும் மலைகள் பயத்தினால் சுமக்காமல் விலகிக் கொண்ட விசயம்
a) அமானத்( அமானிதம்)
b) மவ்த்
c) நூர்
d) பய்யினா
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

13) குர்ஆனில் அல்லாஹ் ஒரேயொரு நாயகத் தோழர்/ தோழி மட்டும் பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறான் . அவர்
a) ஜைனப்               b) ஆயிஷா
c) ஜைது                        d) அபூபக்ர்
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

14) ஃகாத்தமன் நபிய்யீன் ( நபிமார்களின் முத்திரை)
a) ஜிப்ரீல்                                              b) ஆதம் நபி
c) இப்ராஹிம் நபி               d) முஹம்மது நபி
விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

15) திருக்குர்ஆனுக்கு முன்னர் இன்ஜீல் வேதத்தை ஓதுபவராக முஹம்மது நபி இருந்தார்.
a) சரி                   b) தவறு


விடை              ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

0 comments:

Post a Comment

 
Top