1) விடைகளை அல்குர்ஆனின்  ஸுரா 5 வசனம் 90 முதல் ஸுரா வசனம் 110 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
------------------------------------------------------------------------------------
1) இஹ்ராமுடைய நிலையில் மீன்பிடித்து சாப்பிடக்கூடாது- இக்கூற்று
a) சரி                           b) தவறு
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

2) அல்லாஹ் தன்மீது கடமையாக்கி கொண்டது
a) கருணை                                           b) விசுவாசிகளுக்கு அருள்புரிவது
c) தண்டனை செய்தல்                      d) a & b
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)


3) ஆஜர் என்பது
a) இப்ராஹிம் நபியின் புனைப் பெயர்
b) இப்ராஹிம் நபியின் ஊர்தலைவர் பெயர்
c) இப்ராஹிம் நபியின் தந்தை பெயர்
d) இப்ராஹிம் நபியின் ஊரார் வணங்கிய சிலையின் பெயர்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

4) ஷைத்தானுடைய  செயலில் உள்ளவை
a) மதுவும் சூதாட்டமும்                 b) நடப்பட்டவை (சிலை)கள்
c) குறிபார்க்கும் அம்புகள்                        d) அனைத்தும்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)


5)  வானத்திலிருந்து  மாயிதாவை  இறக்கி வைக்க கேட்டவர்கள்
a) மூஸா நபியின் கூட்டம்               b) இப்ராஹிம் நபியின் கூட்டம்
c) ஈஸா நபியின் சீடர்கள்                d) முனாஃபிக்கள்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

6) கடல் மற்றும் கரையில் வழியறிவதற்காக அல்லாஹ் படைத்தவை
a) காற்று        b) நட்சத்திரம்           c) தீவுகள்                              d) அனைத்தும்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

7) அல்லாஹ் ஏற்படுத்தாத ஆனால் நிராகரிப்போர் அல்லாஹ் மீது பொய்யாக கற்பனை செய்பவற்றில் இது இல்லை
a) பஹிரா       b) ஸாயிபா             c) ஹாம்                        d) மஜுஸி
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

8) தொட்டு பார்க்கும் படியாக காகிதத்தில் வேதம் இறங்கியிருந்தால் நிராகரிப்போரின் கூற்று என்னவாயிருக்கும்?
a) கல்லில் இறங்கியிருக்க கூடாதா?           b) இது சூனியமே
c) இதுவே சத்திய வேதம்                d) அனைத்தும்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

9) ஒன்று போல் உள்ள ஆனால் வெவ்வேறான விசயங்களாக அல்லாஹ் குறிப்பிடுவது
a) சூரியன் , சந்திரன்             b) ஜைத்தூன் , மாதுளை
c) ஆப்பிள் , ஆரஞ்சு             d) ஏதுமில்லை
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

10) மார்க்கத்தை விளையாட்டாக , வேடிக்கையாக எடுத்து கொண்டவர்கள் மீது நபியின் பொறுப்பு
a) போரிடல்                     b) அவர்களை விட்டுவிடல்
c) துஆ செய்தல்                 d) அனைத்தும்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

11) நிராகரிப்போர் நரக தண்டனை உறுதியானவுடன் மீண்டும் உலகிற்கு அனுப்பப் பட்டால்
a) நன்மைகள் செய்வர்                   b) தீமைகளை விட்டு விலகி இருப்பர்
c) மீண்டும் தடுக்கப் பட்டதன் பக்கம் திரும்புவர்   d) ஏதுமில்லை
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

12) நான் என் இரட்சகனுக்கு மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை பயப்படுகிறேன்கூறியது
a) ஈஸா நபி                     b) இப்ராஹிம் நபி
c) முஹம்மது நபி               d) மூஸா நபி
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

13) அல்லாஹ் ------ படைத்திருக்க மக்கள் அவற்றை அல்லாஹ்விற்கு இணையாக்குகின்றனர்
a) மலைகள்             b) ஜின்          c) மலக்குகள்           d) ஏதுமில்லை
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

14) இப்ராஹிம் நபி இரட்சகன் என நினைத்தவை
a) சூரியன்               b) சந்திரன்      c) நட்சத்திரம்            d) அனைத்தும்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)


15) அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களேகூறியது
a) ஈஸா நபி                     b) இப்ராஹிம் நபி      
c) முஹம்மது நபி               d) மூஸா நபி
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

16) மரண சாசனம் செய்தால் இருக்க வேண்டிய சாட்சிகள்
a) 2                          b) 4                         c) 6                          d) 8
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)


17) இவ்வுலக வாழ்க்கை ---- அன்றி வேறில்லை
a) வீண் விளையாட்டு            b) விரயம்
c) கடினம்                       d) அனைத்தும்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

18) குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? என கூற கட்டளையிட பட்டவர்
a) ஈஸா நபி                     b) முஹம்மது நபி
c) ஜிப்ரீல்                       d) இப்ராஹிம் நபி
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)


19) நல்லதும் கெட்டதும் சமமாகாது என கூற கட்டளையிட பட்டவர்
a) ஈஸா நபி                     b) முஹம்மது நபி
c) ஜிப்ரீல்                       d) இப்ராஹிம் நபி
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)

20) ----- அல்லாஹ்வை அடையாது- அவனே ---- அடைகிறான்
a) பார்வைகள்                   b) எண்ணங்கள்

c) தீமைகள்                     d) கைகள்
விடை                   ஸுரா எண்(கள்)                  வசன எண்(கள்)
------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

 
Top