1) விடைகளை அல்குர்ஆனின் ஸுரா எண் 46 (அல் அஹ்காஃப்) முதல் 52 (அத்தூர்) முடிய உள்ள ஸுராக்களில் மட்டுமே தேடவும்

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

3) விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) , வசன எண்(கள்) ஐ குறிப்பிடவும்.





1) ஜின்,மனித வர்க்கம் -------- க்காகவே அன்றி படைக்கப்படவில்லை.

       a) சுவனம்                              

       b) வீண்

       c) அல்லாஹ்வை வணங்குதல்     

       d) மரணம்

விடை-              ஸுரா எண்-         வசன எண்-

             

2) மணல் குன்றுகளில் இருந்த சமுதாயம்.

       a) மத்யன்                        

       b) ஆது

       c) ஸமூது                        

       d) ரஸ்ஸு

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



3) அல்லாஹ் -------அடியில் பைஅத் (வாக்குறுதி) செய்தவர்களை பொருந்திக் கொண்டான்.

a)   கிணறு                        

b)   மலை

c)   மரம்                          

d)   கஃபாவின் வாசல்

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



4) மனிதன் சொல்கின்றவற்றை ------- வானவர்கள் எடுத்தெழுதுகின்றனர்.

       a) 1                              

       b) 2

       c) 3                              

       d) 4

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



5) -------------- ன் மீது சத்தியமாக.

       a) தூர்                            

       b) பைத்துல் மஃமூர்

       c) மூட்டப்பட்ட கடல்              

       d) அனைத்தும்

விடை-              ஸுரா எண்-         வசன எண்-





6) “எங்களுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதில் கூறுங்கள்.மேலும் அவரை விசுவாசியுங்கள்” எனக் கூறியது யார்?

a) ஜின்கள்                        

b) மீன்கள்

               c) முஹாஜிர்கள்                  

               d) அன்ஸாரிகள்

விடை-               ஸுரா எண்-        வசன எண்-



7) “இறந்து சவமாயிருக்கும் தன் சகோதரனின் மாமிசத்தை புசித்தல்” –இது எதன் உதாரணம்?

       a) வட்டியை உண்ணல்            

       b) கொலை செய்தல்

       c) விபச்சாரம்                      

       d) புறம் பேசுதல்

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



8) இன்னும் அதிகமாக ஏதும்  இருக்கிறதா? எனக் கேட்பது.

       a) சுவனம்                        

       b) ஷைத்தான்

       c) நரகம்                          

      d) முனாஃபிக்

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



9) அல்குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

a)   சரி                    

b)   தவறு

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



10 ) மனிதர்கள் பல கிளை, கோத்திரங்களாக படைக்கப்பட்டிருப்பது ஏன்?

a)  பொருளாதாரம் ஈட்ட    

b) அறிமுகமாகிக் கொள்ள

              c)  சோதனைக்காக         

             d)  நன்மக்களை அறிவிக்க

விடை-               ஸுரா எண்-        வசன எண்-



11) முஹம்மது நபியின் முன், பின் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான்.

a)  சரி                            

b)  தவறு                  

விடை-               ஸுரா எண்-        வசன எண்-



12) முஹம்மது நபி மற்றும் அவருடன் இருப்போருக்கு இன்ஜீலில் கூறப்பட்டுள்ள உதாரணம்

       a) முக அடையாளம்       

       b) மேகம்

       c) பயிர்                           

       d) மழை

விடை-               ஸுரா எண்-        வசன எண்-



13) இப்ராஹிம் நபி தன் விருந்தினர்களுக்கு அளித்த உணவு

       a) ரொட்டி                  

       b) கிழங்குகள்

       c) மாவு                    

       d) காளைக் கன்று

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



14) அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மக்காவின் ------- ல் வெற்றியைக் கொடுத்தான்

       a) மலை                   

       b) தோட்டம்  

       c) கிணறு                  

       d) பள்ளத்தாக்கு

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



15) சுவனத்தில் ஓடும் ஆறுகள் எவை? விடை கண்டுபிடித்த ஸுரா எண் , வசன எண்களுடன் எழுதவும்.

0 comments:

Post a Comment

 
Top